Wednesday, April 26, 2017

பார் அறிந்ததே.




பாரத மக்கள் வேற்றுமைகள்

பார் அறிந்ததே.

bar அருந்தும் பழக்கம்

ஆங்கிலக்கல்வி யால்,

ஆங்கிலேயர் வருகையால்

ஆனந்தமாக மாறிய பழக்கம்.

நேருவிற்கு ஹிந்து மதத்தில்

நம்பிக்கை இல்லை.

காந்திக்கு காசிநாதர் மீது

 நம்பிக்கை இருந்தாலும்

காசியில் ஏமாற்றும் கும்பல் என்றே

 ஆத்ம சரிதத்தில்

காசினுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆன்மீக வெறுப்பை ஈ.வே .ரா.,

அந்தணர் வெறுப்பாக ,

ஹிந்தி வெறுப்பாக,

வடமொழி வெறுப்பாகக் காட்டி

சொத்து அனுபவிக்க

வேங்கடவன் கோயிலையும்

 கட்டி வாழ்ந்தார்.

ஹிந்தி பிரச்சாரம் அவர் தான் தன்

 ஈரோடு வீட்டில்

முதல் முதலில் துவங்கி வைத்தார்.

அவர் சீடர் கருணா தன வாரிசை

அகில பாரத

அரசியலில் ஈடுபட கற்பித்தார்.

பலர் ஹிந்திக்காக உயிர்த்தியாகம் செய்ய வைத்தார்.

இன்று பட்டி தொட்டி எல்லாம் ஆங்கிலமோகம்

தமிழ் அறிவின்மை என்ற பள்ளிகள்.

தாய் மொழி வழிக் கல்வியை

வேலைவாய்ப்புக்காக என்று முயலாமல்,

அவர் வாரிசுகளும் தொண்டர்களும்

நடத்தும் பணக்கார பள்ளிகள்

மத்திய அரசுப்

பள்ளிகள் ,

ஆனால் ஏழை எளியவர்கள்

கிராமத்துக் குழந்தைகள்
 இலவசமாக படிக்கத்
திறந்த நவோதயா பள்ளிகளுக்கு

எதிர்ப்பாம்.

தமிழகம் பாண்டி தவிர பாரதம்
முழுவதும் நவோதயா ள்ளிகள்.
ஆங்கிலம் சுயநல வியாபார நோக்கம்.

இன்று பலகோடிகள் நீர் நிலை ஆதார பரமாரிப்பு
இரண்டு ஆண்ட ஆளும் தி.மு.க .,
பொய்யாகக் கணக்கெழுதி

தமிழகத்தை வரட்சியடையச் செய்தே ,

விவசாய போராட்டம் என்ற நாடகம்

இதை எடுத்துச் சொல்லவிடாமல்
பந்த் போராட்டம் ,

 அந்த பந்த் என்பதே ஹிந்தி சொல்.

பதாகை , உதய சூரியன் வடமொழி.

ஹிந்தி எதிர்ப்பு அரசியல் சுயநலம்.

ஆங்கிலவளர்ப்பால் தமிழ் அழியும்,

இதற்கு மத்திய அரசா காரணம்.

நேரு போன்ற ஆங்கிலமேதைகள் ,

தாய் மொழி அறிவில்லா மேட்டுக்குடிகள்

ஆங்கிலேமே மதிப்பு என்று

தமிழ் நூல்களை அழியச் செய்தனர்.

ஆலயங்கள் நம் முன்னோர்கள்

நமக்களித்த
சுகாதார மையங்கள்.

உடற்பயிற்சி மையங்கள்.

வைகறைதுயில் எழு

 நம் முன்னோர் கூறியது.

baarukku சென்று பன்னிரண்டு மணிவரை தூங்கி

தாமதமாக எழு இது ஆங்கிலேர்

நம்மை நம்நாட்டை முன்னேறத் தடைக்காக.

பாவிகளை மன்னிப்பார் என்றார்கள்.

பாவ எண்ணங்களை நினைப்பதே தண்டனை என்று
நம் மதம் கூறும் தத்துவம்.

இளைஞர்களே சிந்திப்பீர்.

ஆலய கட்டிடங்கள் இன்றைய
தொழிநுட்ப பீ.ஈ படிப்பவர்களுக்கு சவால்.

திருநள்ளாறு , சிதம்பரம் , மதுரை, தஞ்சாவூர்

ஆங்கில அறிவால் கட்டியதல்ல.

நமது விவசாயத்தை அழிக்கும் அரசியல்

நதி இணைப்புத்திட்டம் அதற்குப் போராடாமல்,

மணல் கொள்ளை அதற்குப்போராடாமல்

விவசாய நிலம் கட்டடமயமாதல் எதிர்க்காமல்

விவசாயிகள் தமிழகம், சிறுநீர் குடித்து

நிர்வாணப் போராட்டம்.

காரணம் மாநில அரசு, காங்கிரசும் திமுக
இணைந்த
கூட்டணி அரசு.
 விவசாயிகள் அரசியல் கூலிப்படைகளாகி

தில்லியில் போராட்டம்.

சென்னையில் ௨௦௧௫இல் பெய்த மழை நீர்
சேமிக்காதததற்கு மாநில அரசே காரணம்.
தனக்கு சொத்து பல லக்ஷம் கோடிகள்.
இதெல்லாம் இளைஞர்கள் சிந்திக்க
வேண்டும் அடிக்கடி பிரசார கூட்டங்கள்.
இந்த இரண்டு திராவிட முட்கள் கஷ்டம் நமக்கு
இவைகள் ஒழிக்க இளைஞர்கள் ,
நாட்டுநலம் விரும்புவோர் , ஊழலை விரும்பாதோர்
சிந்தித்து செயல் பட்டால்
தாமரை மலரும் ,
இதில் என்ன ஐயா , ஐயம் ?

No comments:

Post a Comment