Wednesday, February 26, 2025

ஹிந்தி

 வணக்கம்.

 ஹிந்தி திணிப்பு 

 எதிர்ப்பு என்ற மாயை.

விடுதலை ஆகி 78 ஆண்டுகள்.

 55 ஆண்டுகள்  திராவிட ஆட்சி.

 ஹிந்தி எதிர்ப்பு முழக்கம்.

 ஆனால் தமிழகத்தில் தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 

 1918ல் துவங்கிய ஹிந்தி பிரசாரசபை.

 கிட்டத்தட்ட இன்று ஒவ்வொரு தமிழக கிராமத்திலும் ஹிந்தி ஆசிரியர்கள்

  இந்த ஹிந்தி வளர்ச்சி தெய்வீகம்.

 சத்தியமாக இது கடிபோலி  என்ற இரண்டரை லட்சம் மக்கள் பேசிய பேச்சு மொழி.

125 ஆண்டுகளில் உலகின் பெரிய மொழி.

  கவிப்பேரரசு கண்ணதாசன்  அவர்கள் மொழிகளைப் புகழ்ந்து ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.

 அதில் 

 ஹிந்தி மயிலே ஆடு ஆடு.

 தாயகம் உன்னைத் தாங்கும் தாங்கும் என்கிறார்.

 வட இந்தியாவில் போஜ்புரி மைதிலி அவதி மார்வாடி வ்ரஜபாஷா ஈன்ற பழ மொழிகளை அடக்கி வளர்ந்துள்ள மொழி ஹிந்தி.

 ஆங்கிலம் பாரத மொழிகளை மதிப்பிழக்கச் செய்து வருகிறது.

 அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஆங்கில வழி வகுப்புகள்.

 தமிழ் வழி பள்ளிகள் மூடி இடத்தில் 

ஒரு பள்ளி இருந்த இடத்தில் ஐந்து ஆங்கிலப் பள்ளிகள்.

 அதில் ஹிந்தி மக்களால் விரும்பி கற்கப்படுகிறது.

 ஹிந்தி வளர்ச்சியைத் தடுக்க முடியாது.

 அது பல ஹிந்தி மொழி இல்லா நாட்டு நல விரும்பிகளால்  வளர்க்கப்பட்டது.

 ஈ.வே.ரா என்று போற்றப்படும்

பெரியார் வீட்டில் ஹிந்தி பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது என்பது வரலாறு.

 மக்கள் பொதுவாக இளைஞர்கள் அறிந்து சிந்திக்க வேண்டும்.

சே. அனந்த கிருஷ்ணன் 

 ஹிந்தி பரப்புனர்

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் 

ஹிந்து மேல்நிலைப் பள்ளி 

திருவல்லிக்கேணி.சென்னை.

 

No comments:

Post a Comment