ஆலமரத்தடி விநாயகரை விட
வைரக்கிரீடம் தங்க கவசம் சாத்திய
கடவுள்களுக்கே கூட்டம் .
அஹம் ப்ரஹமாஸ்மி.
ரஜினி ரசிகன் ரஜினி படம் முன் மண்சோறு சாப்பிடுகிறான் .
கடஅவுட் பாலாபிஷேகம் செய்கிறான் .
கற்பூரம் காட்டுகிறான் .
குஷபு கோவில் அனைவருக்கும்
தெரியும் .எம்.ஜி.யார் கோவில்
அண்ணா சமாதியில் வழிபாடு
ஈவேரா செருப்புகழட்டிவிட்டுத்தான் சமாதிக்குள் .பக்தி
என்னடம் பணம் இருந்து
லட்சம் பேருக்கு தலா ஒரு லட்சம் கொடுத்தால் நானே கடவுள் . வள்ளல் .
தொழிற்சாலை முதலாளியாகி ஐயாயிரம் பேருக்கு வேலை அளித்தால் நானே தெய்வம்.
விபத்தில் அடிபட்டு யாரும் கவனிக்காத போது முன் பின் அறியாத ஒருவர் முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்தால் அவனே கடவுள்.
இப்படி உடனடி தேவைகளுக்கு உதவ மனிதர்களை அனுப்பும்
ஆண்டவன் ஒரு பெரும் சக்தி.
No comments:
Post a Comment